Wednesday, May 9, 2007

கர்பரக்ஷாம்பிகை அம்மன்

நான் இன்று கர்பரக்ஷாம்பிகை அம்மன் கோவில் பற்றி எழுதவிருக்கிறேன். இத்திருக்கோவில் திருக்கருகாவூர் என்ற இடத்திலுள்ளது. இந்த கோவில் கும்பகோணத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. குழந்தையில்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நெய் வாங்கிக் கொடுப்பார்கள். அந்த நெய்யை அம்மனின் பாதங்களில் வைத்து பூஜை செய்து தம்பதியிடம் கொடுப்பார்கள். அதை தினமும் 48 நாட்கள் தொடர்ந்து (பெண்களுக்கு 3 நாட்கள் தவிர) இருவரும் சாப்பிட வேண்டும். அப்படி செய்தால் அம்மனின் அருளால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும். அதே போல கர்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆக தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து விளக்கெண்ணெய் வாங்கித் தர வேண்டும். இதை அம்மனின் பாதங்களில் வைத்து பூஜை செய்து தருவார்கள். இதை தினமும் சிறிது எடுத்து அடி வயிற்றில் தடவ வேண்டும். அதே போல வலி எடுக்கும் போது இந்த எண்ணையை தடவிக்கொண்டால் அம்மனின் அருளால் சுக்ப் பிரசவம் ஆகும். கன்னிப் பெண்களும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் சீக்கரம் திருமணம் கைக்கூடும்.


ஸ்தல வரலாறு: நித்துருவர் முனிவருக்கும் வேதிகாவிற்கும் குழந்தை நீண்ட நாளாக பிறக்காத்தினால் சிவனையும், அம்பாளையும் வேண்டி பூஜை செய்து வந்தார்கள். இதனால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. அப்பொழுது ஒரு நாள் தன்னையும் மறந்து, தன் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை நினைத்து வேதிகா கனவு கண்டுகொண்டிருந்தாள். முனிவரும் அப்பொழுது வெளியில் சென்று விட்டார். இந்த நேரம் பார்த்து தர்ச்செயலாக அங்கு உர்த்தவ முனிவர் வந்து சேர்ந்தார். அவர் வந்ததைக் கூட வேதிகா கவனிக்காதலால் வெகு கோவம் கொண்டு, நீ நினைத்து கொண்டிருப்பது எதுவானாலும் உன்னை விட்டு பிரிந்து போக என்று சபித்தார். இதனால் இவள் வயிற்றிலிருக்கும் சிசு தன்னுடைய கர்ப்பபையிலிருந்து நகர்ந்து சென்றது. இதனால் வலி தாங்க முடியாமல் அம்பாளை வேண்டினாள், இதனால் அம்பாள் கர்ப்பரக்ஷாம்பிகையாக அவதரித்து அந்த சிசுவை ஒரு பானையில் வைத்து, பாதுகாத்து வந்தாள். பிறகு பத்து மாதம் முடிந்ததும் அந்த பானையிலிருந்து ஒரு அழகான ஆண் குழந்தையை வேதிகாவிடம் ஒப்படைத்தாள். அதனால் வேதிகா, அம்மனிடம் இந்த இடத்திலேயே இருந்து எல்லா கர்பிணி பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதனால் தான் அம்மன் கர்பரக்ஷாம்பிகையாக இங்கிருந்து இன்றைக்கும் எல்லோரையும் காத்து வருகிறாள்.


இங்கிருக்கும் சிவனின் பெயர் முல்லைவன நாதர். இந்த சிவலிங்கம் ஸ்வயம்புவாக அதாவது தானாகவே உருவானது. இதனால் சிவனுக்கு தண்ணீர் விட்டு அபிஷேகம் செய்வதில்லை. ஆனால் புனுகு சாத்தி சிவலிங்கத்தை வைத்திருப்பார்கள். குணமாகாத வியாதி உள்ளவர்களும் இங்கு வந்து சிவனுக்கு புனுகு சட்டம் சாத்தி சிவனை வழிப்படுவார்கள். இதனால் வியாதி குணமாகி நலமடைவார்கள்.

சுகப்பிரசவம் ஆக பிரார்த்தனை ஸ்லோகம்

ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதி நாதரி மன்னாத ஸாம்ப சசிசூட ஹரிதிரிசூலின் சம்போ சுகப்பிரசவ கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே

சுகப்பிரசவம் ஆக இதை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்

ஹமவத் யுத்தரே பார்ச்வே ஸுரதா நாம யக்ஷிணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணிபவேது



0 comments: