Monday, October 22, 2007

மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் பாகம் 2

{தொடர்ச்சி}


இதன் முந்தய பதிவை பார்க்க இங்கே பார்க்கவும்.


பொற்றாமரை குளம்; இக்குளத்தை சிவபெருமான், நந்தி தேவர் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க, தன் சூலத்தால் புமியில் குத்தி தண்ணீரை வரவழைத்தார். இக்குளத்தில் உள்ள தாமரையைத் தான் இந்திரன் தன் பூஜைக்கு உபயோகப் படுத்தினார். இத்தீர்த்திற்கு ஆதி தீர்த்தம், சிவகங்கை மற்றும் உத்தம தீர்த்தம் என்னும் பல பெயர்கள் உள்ளது. இத்தீர்த்தம் முதன் முதலில் வந்ததால் ஆதி தீர்த்தம் என்ற பெயர் பெற்றது. அது போல், ஞானத்தை அளிக்கும் தீர்த்தம் ஆனதால் ஞான தீர்த்தம் என்றும், பரம தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. அது போல் இக்குளத்தில் குளித்தால் முக்தி தரும் தீர்த்தமாதலால், முக்தி தீர்த்தம் என்ற பெயரும் பெற்றது. முன்னொரு காலத்தில் இக்குளத்தில் ஒரு கொக்கு தவம் செய்தது. அப்பொழுது, அங்கிருக்கும் மீன்கள் அத்தவத்தை கலைக்க முற்பட்டது. இதனால், தவம் முடிந்து வரம் கேட்கும் நேரத்தில், இங்கு எந்த மீன்களும் வசிக்கக்கூடாது என்ற வரத்தையும் கொக்கு வாங்கிக் கொண்டதால், இக்குளத்தில் இன்றும் எந்த மீன்களும் வசிப்பதில்லை. இக்குளத்தில் தான் சங்கப் பலகை மிதக்க விட்டு எந்த பாட்டுகளும், கவிதைகளும் இலக்கியத்திற்கு ஏற்றவை என்று சோதனை செய்யப்படும். அப்படி அவை ஏற்றவை அல்லாதவையாக இருந்தால், அந்த கவிதைகள் தண்ணீரில் மூழ்கி விடும். மற்றவை கரையில் சேர்க்கப் படும். அப்படி சோதித்து தேற்வு பெற்றதில் திருக்குறளும் ஒன்று.

கோபுரங்கள்; கோபுரங்களுக்கு பிரசித்தி வாய்ந்த கோவில்களுள் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலும் ஒன்று. மொத்தம் 14 கோபுரங்கள் இக்கோவிலில் உள்ளது. அவைகளுள் ஒன்பது அடுக்கு ராஜகோபுரங்கள் நான்கு உள்ளன. இந்த ராஜகோபுரங்கள் கோவிலின் நான்கு திசைகளிலும் உள்ளது. அதன் பெயர்கள் கிழக்கு ராஜ கோபுரம், மேற்கு ராஜ கோபுரம், தெற்கு ராஜ கோபுரம் மற்றும் வடக்கு ராஜ கோபுரம் ஆகும். பிறகு ஏழு அடக்கு சித்திரை கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுரத்தை அம்மன் சந்நிதி கோபுரம் என்றும் சொல்லலாம். இக்கோபுரத்தில் பல சிற்பங்கள் உள்ளதால் இதற்கு சித்திரக் கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. அடுத்தது ஐந்து அடுக்கு கோபுரங்கள் ஐந்து உள்ளன. அவை கோபுர நாயக கோபுரம் அல்லது சுவாமி சந்நிதி கோபுரம், முக்குருணி வினாயகர் கோபுரம் அல்லது நடுகாட்டு அல்லது இடைக்காட்டு கோபுரம், சின்ன மொட்டை கோபுரம், கடஹ கோபுரம் மற்றும் மர கோபுரம் உள்ளன. அடுத்து மூன்று அடுக்கு கோபுரம் இரண்டு உள்ளன. அவை அம்மன் சந்நிதி கோபுரம் மற்றும் சுவாமி சந்நிதிகள் ஆகும். பிறகு கடைசியாக இரண்டு தங்க கோபுரங்கள் உள்ளன. அவை இந்திர விமானம் கொண்ட சுவாமி சந்நிதி மற்றும் அம்மன் சந்நிதியில் உள்ளது. சுவாமி சந்நிதியில் உள்ள தங்க கோபுரத்தில் எட்டு யானைகளும், முப்பத்தி இரண்டு சிங்களுகளும், அறுபத்தி நான்கு சிவகணங்களும் இக்கோபுரத்தை தாங்குவது போல் காட்சி அளிக்கும். இது பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். ஆக இந்த பதிநான்கு கோபுரங்களும் இக்கோவிலில் சுற்றி அமைந்து கோவிலின் வெளி தோற்றம் மிகவும் அகலமாகவும், அழகாகவும் காட்சி அளிக்கும்.

மண்டபங்கள்; கொலு மண்டபம், கிளிகூண்டு அல்லது சங்கிலி மண்டபம் அல்லது யாழி மண்டபம், இருட்டு மண்டபம் அல்லது முத்துப்பிள்ளை மண்டபம், ஆறுகால் மண்டபம், அஷ்டசக்தி மண்டபம், வெள்ளியம்பல மண்டபம், அறுபத்தி மூன்று நாயன்மார்கள் மண்டபம், வன்னியடி நடராஜர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், நால்வர் மண்டபம் (அப்பர், சுந்தர ர், மாணிக்கவாசகர் மற்றும் திருதாவுக்கரசர்), மீனாட்சி நாயகர் மண்டபம், சுவாமி சந்நிதி கருவரை மண்டபம் சுவரொற்றி தக்ஷிணாமூர்த்தி மண்டபம், துர்கை மண்டபம் மற்றும் லிங்கோதுபவர் மண்டம்ப் உள்ளது. அது தவிர நூரு கால் மண்டபம் அல்லது மண்டப நாயக மண்டபம், கல்யாண மண்டபம், நகரா மண்டபம், புது மண்டபம், முத்துராமையர் மண்டபம், பேச்சியக்காள் மண்டபம், நந்தி மண்டபம், மங்கயர்க்கரசி மண்டபம், தேரடி மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம் மற்றும் பழைய ஊஞ்சல் மண்டபம் என்று பல மண்டபங்கள் உள்ளன.

அஷ்டசக்தி மண்டபம்; இந்த மண்டபத்தை திருமலை நாயகரின் மனைவிகள் கட்டினார்கள். இந்த மண்டபத்தில் எட்டு சக்திகளான கௌமாரி, ரௌத்திரி, வைஷ்ணவி,ஞானரூபிணி, மகாலக்ஷ்மி,மகேஷ்வரி, ஷாமளா மற்றும் மணோண்மணியின் சிலைகள் இருக்கும்.

முத்துராமையர் மண்டபம்; இந்த மண்டபத்தில் தான் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி விக்ரகங்கள் உள்ளன. இந்த மண்டபத்தில் தான் அன்னதானம் நடக்கும்.

தேரடி மண்டபம்; இந்த மண்டபத்தில் தான் மீனாக்ஷி அம்மனையும் மற்றும் சுந்தரேஸ்வரரையும் அமர்த்தி பின் ஊர்வலம் வருவார்கள். புது ஊஞ்சல் மண்டபம்; இந்த புது ஊஞ்சல் மண்டபத்தில் தான் அம்பாளையும் சிவனையும் அமர்த்தி ஊஞ்சலாட்டும் வைபோகம் நடக்கும்.

கொலு மண்டபம்; இந்த மண்டபத்தில் தான் நவராத்திரி நேரத்தில் பல விதமான கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து கொண்டாடுவார்கள்.
இன்னும் இந்த கோவிலின் அழகையும் அமைப்பையும் சொல்லச்சொல்ல முடியாத ஒன்று. நீங்களே நேரில் சென்று கண்டு களிங்கயேன்.
இந்த மீனாட்சி அம்மனின் பாடலை கேட்டு மகிழ இங்கே பார்க்கவும்.இந்த பாட்டின் வரிகளை படிக்க என் முந்தய பதிவிலுள்ளதை பார்க்க இங்கே பார்க்கவும்.

Wednesday, October 17, 2007

மீனாட்சி அம்மன் திருக்கோவில்- பாகம் 1

இந்த வாரம் நாம் பார்க்கப் போகும் ஆலயம் மீனாட்சி அம்மன் திருக்கோவில். இந்த ஆலயம் மதுரை மாநகரத்தில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் சுந்ததேஸ்வரர். இன்னும் இவருக்கு மற்ற பெயர்களும் உள்ளது. அவற்றில் ஒரு சில பெயர்களை குறிப்பிடுகிறேன். சோமசுந்தரர், கல்யாண சுந்தரர், சொக்கநாதர், கடம்பவனேஸ்வரர். இன்னும் பல உள்ளன. அதுபோல் அம்மனின் பெயர் மீனாட்சி. மற்ற பெயர்கள் அங்கயர்க்கண்ணி, மரகதவல்லி, கோமகள், அபிராமவல்லி, சுந்தரவல்லி இன்னும் பல. ஒரு சில இடங்களில் சிவனுக்கு சக்தி அதிகம், அது போல் ஒரு சில இடங்களில் அம்மனுக்கு சக்தி அதிகம். அப்படி பார்த்தால் மதுரை, மீனாட்சி அம்மனின் ஆட்சியில் தான் நடக்கிறது. நாம் கூட கிண்டலுக்கு கேட்போம் என்ன உங்கள் வீட்டில் மீனாட்சியா, சிதம்பரமா. இந்த கேள்விக்கு அர்த்தம், வீட்டில் பெண்ணின் ஆட்சியா இல்லை ஆணின் ஆட்சியா. இது கிண்டலுக்காக கேட்பது. மீனாட்சி= மீன்+ஆட்சி. மதுரை மீனாட்சி தன் மீன் போன்ற கண்களினால், அந்த இடத்தையே ஆட்சி புரிகிறாள். இதற்கு புராணத்தில் கதை உள்ளது.




ஸ்தல வரலாறு; பாண்டிய வம்சத்தில் வந்த மலயத்துவஜர் என்னும் அரசனுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. இதனால் தனக்கு ஒரு குழந்தை வேண்டுமென ஒரு வேள்வி நடத்தினார். இந்த வேள்வியின் முடிவில் ஒரு பெண் குழந்தை அந்த ஓமகுண்டத்திலிருந்து தோன்றியது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த அம்மன்னன் அந்த குழந்தைக்கு அங்கயற்கண்ணி என்றும் மீனாட்சி என்றும் பெயர் சூட்டினார். ஆனால் அந்த குழந்தைக்கு மூன்று மார்பகங்கள் இருந்தது. இதனால் அம்மன்னன் மிகவும் வருத்தமடைந்தான். அப்பொழுது அசரீரியாக ஒரு குரல் வந்து, '' எப்பொழுது உன் மகள், தன் மனதிற்கு பிடித்த மணாளனை காண்கிறாளோ அப்பொழுதே அந்த மூன்றாவது மார்பகம் மறைந்துவிடும்'' என்றது. இதனால் மனம் திருப்தி அடைந்த அம்மன்னன், தன் பெண்ணை மிகவும் தைரியசாலியாக வளர்த்தார். வெகு விரைவிலேயே மன்னனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், மீனாட்சியை அரசியாக முடிசூட்டினார்கள். மீனாட்சியும், தன் வலிமையால் மற்ற அரசர்களை வெற்றி கொண்டாள். இப்படி ஒரு நாள், கைலாயத்தில் போர் நிகழும் போது, மீனாட்சி தன் மணாளனான சிவபெருமானை காண்கிறாள். அந்த நேரத்தில் அவளுடைய மூன்றாவது மார்பகம் மறையவே, இவர் தான் தான் மணக்கப்போகும் மனாளன் என்பதை உணர்ந்து சிவபெருமானிடம் போரிடாமல், நாணத்தால் தன் தலை குணிந்தாள். இதன் பிறகு மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரரான சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தேறியது. பின்னர் சிவபெருமான் ஆட்சி புரிந்து பின்னர் உக்கிர பாண்டியன் என்னும் மகனை மதுரைக்கு முடிசூட்டிவிட்டு, சிவனும் அம்பாளும் கைலைக்கு செல்கிறார்கள். ஆனாலும் இன்று வரை அந்த மீனாட்சி அம்மனே மதுரையை ஆட்சி புரிந்து, மக்களை வாழ்த்துகிறார்.

இன்னும் சிவபெருமானுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. ஒரு நாள் இந்திரன் பூலோகத்திற்கு வந்தான். அப்பொழுது கடம்பவனத்தில் சிவலிங்கம் ஒன்றை கண்டார். அந்த சிவலிங்கத்தை வணங்கி பின் அதை கொண்டுவந்து மதுரையில் பிரதிஷடை செய்தான். பின் அந்த கோயிலை எடுத்து பெரிதாக கட்டியது குலசேகர பாண்டியன் என்னும் மன்னன். நாம் இந்திரன் பிரதிஷ்டை செய்ததிற்கு ஆதாரமாக அங்கு இந்திர வாகனத்தை பார்க்கலாம். நடுவில் பல வேற்று மத அரசினரால் ஆட்சி செய்யப் பட்டதினால், இவ்வாலத்தில் பல சிற்பங்கள் சீர் குலைந்து போனது. பின் இத்திரு ஆலயத்தை திருமலை நாயக்கர் என்னும் அரசர், பல வேலை பாடுகள் செய்து, மீண்டும் ஒரு நல்ல நிலைமைக்கு உருவாக்கினார்.

(தொடரும்)