Thursday, May 31, 2007

உன்னாலே உன்னாலே

இந்த படத்தில் வினய் தான் நம்ம கதாநாயகன், சதாவும் தனிஷாவும் கதாநாயகிகள். இந்த படத்தில் எல்லாமே திரும்ப திரும்ப வந்துக் கொண்டே இருக்கும். அதாவது அதே நான்கைந்து முகங்களும், நான்கைந்து வரிகளும் திரும்ப திரும்ப வருகிறது. அதனால் தான் இந்த படத்தின் தலைப்பு கூட இரண்டு முறை வருகிறது. இந்த படத்தில் வித்யாசமாக யாருக்குமே அப்பா
அம்மாவை காட்டவேயில்லை. அதனால் காதலுக்கு எதிர்ப்பு கிடையாது. வினய்க்கு ஒரே ஒரு அக்கா. அக்கா வேடத்தில் நடித்திருப்பது உமா பத்மநாபன். இவங்களும் ஒரு சில காட்சியில் மட்டுமே வந்து போகிறார்கள். படத்தில் வரும் கதையை முக்கால்வாசிக்கு மேல் ஆஸ்திரேலியாவில் தான் எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் நம்ம கதாநாயகன் பெயர் கார்த்திக்,
கதாநாயகிகளின் பெயர்கள் ஜான்சி (சதா), தீபிகா (தனிஷா). சரி கதையைப் பார்ப்போம். எடுத்த உடனே நம்ம ஜான்சியும், கார்த்திக்கும் சண்டை போட்டுவிட்டு பிரிந்து விடுகிறார்கள். பிறகு அந்த துக்கத்தில் கார்த்திக் ஓரு சோக பாடலை பாடி முடிக்கிறார். பிறகு அவர் முகத்தில் சோகத்தையும் காணும், காதலியை தேடவும் காணும். இது இப்படியிருக்க கார்த்திகிற்கு வேலை விஷயமாக ஒரு ஆறு மாதத்திற்கு ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அங்கு விமான நிலையத்தில் ஒரு பெண்ணிற்கு பொட்டிட்டு, ஆரத்தி எல்லாம் எடுக்கிறார்கள். அந்த பெண் விமானத்தில் வந்து உட்கார்ந்தவுடன் தன்னை நாகரீக மங்கையாக அலங்காரம் செய்துக்கொள்கிறாள். அவள் பெயர் தீபிகா. கார்த்திக்கும், தீபிகாவும் பக்கத்து பக்கத்தில் இடம் கிடைக்கிறது. தீபிகா, கார்த்திக்கிடம் பேசி பழகி இருவரும் நண்பர்களாகிறார்கள்.
இருவரும் ஆஸ்திரேலியா வந்து சேருகிறார்கள். தீபிகாவை அழைத்து செல்ல அங்கு ஜான்சி வருகிறாள். ஆகவே கார்த்திக்கை பார்த்ததும் உடனே தீபிகாவை சீக்கிரமாக அழைத்து செல்ல பார்த்தும், கார்த்திக் ஜான்சியை பார்த்து விடுகிறார். பின் கார்த்திக் ஜான்சிசை துரத்தி துரத்தி தேடி பேசிய விஷயங்களையே மறுபடியும் பேசி நிறைய நேரம் கதையில்
போய் விடுகிறது . கார்த்திக் அங்கு ஒரு தமிழ் ஆளை சந்தித்து அவனை நண்பனாக்கிக கொண்ட பிறகு ஜான்சிக்கும் தனக்கும் எப்படி சந்திப்பு உண்டாயிற்று என்று கூற ஆரம்பித்து அவளை காதலித்தது பற்றியும், பிறகு தான் மற்ற பெண்களிடம் சகஜமாக பழகுவதை தவறாக ஏற்றுக் கொண்டு சந்தேகப்பட்டு பிரிந்து போனது வறை கூறி முடிக்கிறார். அதன் பிறகு தீபிகாவும் கார்திக்கும் பழகுவது பற்றி பிடிக்காததால், ஜான்சி தனக்கும் கார்த்திகிற்கும் நடந்த சம்பவங்களை தீபிகாவிடம் கூறுகிறார். இதனால் நண்பனாக நினைத்த கார்த்திக்கை தீபிகா நிஜமாகவே காதலிக்க ஆரம்பிக்கிறார். பிறகு ஆறு நாட்களில் கார்த்திக் தன்னை காதலிக்கறாரா பார்க்கலாம் என்று ஜான்சியிடம் தீபிகா கூறுகிறாள். அதற்காக கார்த்திக்கிடம் நெருக்கமாக பழக ஆரம்பிக்கிறார். இதற்கிடையில் ஒரு நாள் கார்திக்கிற்கு கையில் அடி பட்டுவிடுகிறது. அதனால் அவனை மருத்துவமையில் சேர்ப்பதிலிருந்து அவனுக்கு பனிவிடைகள் செய்வது வறை தீபிகா
அவன் கூடவே இருக்கிறாள். ஆனால் இதற்கிடையில் ஜான்சிக்கு உள்ளூர கோபமிருந்தாலும் கார்த்திகை மறைமுகமாக காதலிக்கிறார். ஆனால் தீபிகாவின் அன்பைவிட நமது அன்பு குறைவே என்ற முடிவிற்கு வந்து, தான் கார்திக்கை நமது இஷ்டபடி தான் நடக்க வேண்டும், என்று தாம் நினைத்ததை எண்ணி அந்த ஊரைவிட்டே மறுபடியும் சென்று விடுகிறாள்.
இதற்கிடையில் தீபிகா தனது காதலை கார்த்திக்கிடம் வெளிபடுத்துகிறாள். தன்னை புரிந்துக் கொள்ளாத ஜான்சியை விட தீபிகாவே நல்லவள் என்ற முடிவுக்கு வந்து கார்த்திக் தீபிகாவை திருமணம் செய்துக் கொள்கிறான். இது தான் கதை. இந்த படத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

Tuesday, May 22, 2007

மாங்காட்டின் முக்கோவில்கள்

இந்த வாரத்தின் கோவில் மாங்காட்டில் உள்ள முக்கோவில்கள். முதலில் வள்ளீஸ்வரர் சிவன் கோவில். இந்த ஆலயம் மாங்காட்டு காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இருக்கிறது. இத்திருக்கோவிலில் அம்மனே சிவனை வந்து வணங்குவதாக ஐதீகம். அம்மன் சிவனை வந்து வணங்கும் இடத்தை குறிப்பதற்காக அங்கே நந்தியின் முன்னால் அம்மனின் பாதங்களை பதித்திருக்கிறார்கள். இது மிகவும் பழமையானக் கோவிலாகும். ஆனால் இந்த கோவிலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கும். எல்லா மக்களும் அம்மன் கோவிலுக்கு மட்டும் சென்று வருவார்கள். இதனால் இந்த கோவில் பிரசித்தி ஆகவில்லை. ஆனால் இங்கே அம்மனே சிவனை வணங்க வருவதால், இந்த சிவனுக்கு சக்தி அதிகம். ஆதிசங்கரர் இந்த கோவில் முன்னேற்றத்திற்கு உதவியிருக்கிறார். இப்பொழுது சிறிது காலமாக ஆலய திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. தன்னால் இயன்ற அளவிற்கு ஒவ்வொருத்தரும் இந்த கோவிலுக்கு கொடுத்து உதவினால், கோவில் முன்னேற்றத்திற்கு நலமாக இருக்கும்.

அம்மன் கோவிலின் மற்றொரு பக்கத்தில் விஷ்னு ஆலயம் இருக்கிறது. இந்த கோவிலில் இருக்கும் பெருமாள் தன் தங்கையான அம்மனின் திருமணத்திற்காக நகைகள் வாங்கி கொண்டு வருவதாக ஐதீகம். அதனால் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தன் கையில் நகையுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில், பெருமாள் சந்நிதியின் ஒரு புரத்தில் ஆண்டாள் சந்நிதி தனியாக உள்ளது. மற்றொரு புரத்தில் மகாலக்ஷ்மிக்கு தனி சந்நிதி உள்ளது.

மாங்காடு காமாட்சி அம்மன் ஸ்தல வரலாறை படிக்க இங்கே பார்க்கவும்.

இங்கே அம்மனின் ஆலயத்திற்கு வருபவர்கள், மற்ற கோவில்களுக்கும் சென்று வந்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

ஸ்வர்ண காமாக்ஷி

வேத வேத ரூபிணி என்ற பாட்டை கேட்கவும், படிக்கவும் இங்கே பார்க்கவும்.

Wednesday, May 9, 2007

கர்பரக்ஷாம்பிகை அம்மன்

நான் இன்று கர்பரக்ஷாம்பிகை அம்மன் கோவில் பற்றி எழுதவிருக்கிறேன். இத்திருக்கோவில் திருக்கருகாவூர் என்ற இடத்திலுள்ளது. இந்த கோவில் கும்பகோணத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. குழந்தையில்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நெய் வாங்கிக் கொடுப்பார்கள். அந்த நெய்யை அம்மனின் பாதங்களில் வைத்து பூஜை செய்து தம்பதியிடம் கொடுப்பார்கள். அதை தினமும் 48 நாட்கள் தொடர்ந்து (பெண்களுக்கு 3 நாட்கள் தவிர) இருவரும் சாப்பிட வேண்டும். அப்படி செய்தால் அம்மனின் அருளால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும். அதே போல கர்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆக தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து விளக்கெண்ணெய் வாங்கித் தர வேண்டும். இதை அம்மனின் பாதங்களில் வைத்து பூஜை செய்து தருவார்கள். இதை தினமும் சிறிது எடுத்து அடி வயிற்றில் தடவ வேண்டும். அதே போல வலி எடுக்கும் போது இந்த எண்ணையை தடவிக்கொண்டால் அம்மனின் அருளால் சுக்ப் பிரசவம் ஆகும். கன்னிப் பெண்களும் இங்கு வந்து வேண்டிக் கொண்டால் சீக்கரம் திருமணம் கைக்கூடும்.


ஸ்தல வரலாறு: நித்துருவர் முனிவருக்கும் வேதிகாவிற்கும் குழந்தை நீண்ட நாளாக பிறக்காத்தினால் சிவனையும், அம்பாளையும் வேண்டி பூஜை செய்து வந்தார்கள். இதனால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. அப்பொழுது ஒரு நாள் தன்னையும் மறந்து, தன் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை நினைத்து வேதிகா கனவு கண்டுகொண்டிருந்தாள். முனிவரும் அப்பொழுது வெளியில் சென்று விட்டார். இந்த நேரம் பார்த்து தர்ச்செயலாக அங்கு உர்த்தவ முனிவர் வந்து சேர்ந்தார். அவர் வந்ததைக் கூட வேதிகா கவனிக்காதலால் வெகு கோவம் கொண்டு, நீ நினைத்து கொண்டிருப்பது எதுவானாலும் உன்னை விட்டு பிரிந்து போக என்று சபித்தார். இதனால் இவள் வயிற்றிலிருக்கும் சிசு தன்னுடைய கர்ப்பபையிலிருந்து நகர்ந்து சென்றது. இதனால் வலி தாங்க முடியாமல் அம்பாளை வேண்டினாள், இதனால் அம்பாள் கர்ப்பரக்ஷாம்பிகையாக அவதரித்து அந்த சிசுவை ஒரு பானையில் வைத்து, பாதுகாத்து வந்தாள். பிறகு பத்து மாதம் முடிந்ததும் அந்த பானையிலிருந்து ஒரு அழகான ஆண் குழந்தையை வேதிகாவிடம் ஒப்படைத்தாள். அதனால் வேதிகா, அம்மனிடம் இந்த இடத்திலேயே இருந்து எல்லா கர்பிணி பெண்களையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதனால் தான் அம்மன் கர்பரக்ஷாம்பிகையாக இங்கிருந்து இன்றைக்கும் எல்லோரையும் காத்து வருகிறாள்.


இங்கிருக்கும் சிவனின் பெயர் முல்லைவன நாதர். இந்த சிவலிங்கம் ஸ்வயம்புவாக அதாவது தானாகவே உருவானது. இதனால் சிவனுக்கு தண்ணீர் விட்டு அபிஷேகம் செய்வதில்லை. ஆனால் புனுகு சாத்தி சிவலிங்கத்தை வைத்திருப்பார்கள். குணமாகாத வியாதி உள்ளவர்களும் இங்கு வந்து சிவனுக்கு புனுகு சட்டம் சாத்தி சிவனை வழிப்படுவார்கள். இதனால் வியாதி குணமாகி நலமடைவார்கள்.

சுகப்பிரசவம் ஆக பிரார்த்தனை ஸ்லோகம்

ஹே சங்கர ஸ்மரஹர ப்ரமதாதி நாதரி மன்னாத ஸாம்ப சசிசூட ஹரிதிரிசூலின் சம்போ சுகப்பிரசவ கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே

சுகப்பிரசவம் ஆக இதை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்

ஹமவத் யுத்தரே பார்ச்வே ஸுரதா நாம யக்ஷிணி
தஸ்யா: ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணிபவேது



Wednesday, May 2, 2007

செண்பகவல்லி அம்மன்




நான் இன்று செண்பகவல்லி அம்மன் கோவிலைப் பற்றி எழுதப்போகிறேன். இத்திருக்கோவில் கோவில்பட்டி என்ற இடத்தில் உள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் கோவில்மேடு என்னும் இடத்தில் காந்தி மைதானத்திற்கு பின்புரத்தில் உள்ளது. இந்த கோவிலை செண்பகராஜா என்னும் அரசர் கட்டியுள்ளார். இது மிகவும் பழமைவாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் இருக்கும் சிவனின் பெயர் பூவனநாதசுவாமி. இங்கிருக்கும் அம்மனின் சிலை வடிவம் சுமார் ஏழு அடி உயரம் இருக்கும். அம்மனை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். அம்மனுக்கும் சிவனுக்கும் தனித்தனி பிரகாரங்கள் உள்ளது. இங்கிருக்கம் அம்மனுக்கு சக்தி அதிகம். அம்மனின் அருளால் அங்கு எல்லோருமே சுபிக்ஷமாக இருக்கிறார்கள். இந்த கோவிலில் ஆடிப்பெருக்கு, நவராத்திரி, வருஷப்பிறப்பு போன்ற விசேஷங்கள் விமர்சையாக கொண்டாடப்படும். அதுமட்டுமில்லாது, மார்கழி மாதம் முழுவதுமே அம்பாளுக்கு விசேஷமாக கொண்டாடப்படும். உங்களுக்கு இக்கோவில் பற்றி தெரிந்த மற்ற விஷயங்களையும் நாம் பரிமாரிக்கொள்ளலாம்.