Tuesday, May 22, 2007

மாங்காட்டின் முக்கோவில்கள்

இந்த வாரத்தின் கோவில் மாங்காட்டில் உள்ள முக்கோவில்கள். முதலில் வள்ளீஸ்வரர் சிவன் கோவில். இந்த ஆலயம் மாங்காட்டு காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இருக்கிறது. இத்திருக்கோவிலில் அம்மனே சிவனை வந்து வணங்குவதாக ஐதீகம். அம்மன் சிவனை வந்து வணங்கும் இடத்தை குறிப்பதற்காக அங்கே நந்தியின் முன்னால் அம்மனின் பாதங்களை பதித்திருக்கிறார்கள். இது மிகவும் பழமையானக் கோவிலாகும். ஆனால் இந்த கோவிலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கும். எல்லா மக்களும் அம்மன் கோவிலுக்கு மட்டும் சென்று வருவார்கள். இதனால் இந்த கோவில் பிரசித்தி ஆகவில்லை. ஆனால் இங்கே அம்மனே சிவனை வணங்க வருவதால், இந்த சிவனுக்கு சக்தி அதிகம். ஆதிசங்கரர் இந்த கோவில் முன்னேற்றத்திற்கு உதவியிருக்கிறார். இப்பொழுது சிறிது காலமாக ஆலய திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. தன்னால் இயன்ற அளவிற்கு ஒவ்வொருத்தரும் இந்த கோவிலுக்கு கொடுத்து உதவினால், கோவில் முன்னேற்றத்திற்கு நலமாக இருக்கும்.

அம்மன் கோவிலின் மற்றொரு பக்கத்தில் விஷ்னு ஆலயம் இருக்கிறது. இந்த கோவிலில் இருக்கும் பெருமாள் தன் தங்கையான அம்மனின் திருமணத்திற்காக நகைகள் வாங்கி கொண்டு வருவதாக ஐதீகம். அதனால் தான் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தன் கையில் நகையுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில், பெருமாள் சந்நிதியின் ஒரு புரத்தில் ஆண்டாள் சந்நிதி தனியாக உள்ளது. மற்றொரு புரத்தில் மகாலக்ஷ்மிக்கு தனி சந்நிதி உள்ளது.

மாங்காடு காமாட்சி அம்மன் ஸ்தல வரலாறை படிக்க இங்கே பார்க்கவும்.

இங்கே அம்மனின் ஆலயத்திற்கு வருபவர்கள், மற்ற கோவில்களுக்கும் சென்று வந்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

0 comments: