Monday, October 22, 2007

மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் பாகம் 2

{தொடர்ச்சி}


இதன் முந்தய பதிவை பார்க்க இங்கே பார்க்கவும்.


பொற்றாமரை குளம்; இக்குளத்தை சிவபெருமான், நந்தி தேவர் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க, தன் சூலத்தால் புமியில் குத்தி தண்ணீரை வரவழைத்தார். இக்குளத்தில் உள்ள தாமரையைத் தான் இந்திரன் தன் பூஜைக்கு உபயோகப் படுத்தினார். இத்தீர்த்திற்கு ஆதி தீர்த்தம், சிவகங்கை மற்றும் உத்தம தீர்த்தம் என்னும் பல பெயர்கள் உள்ளது. இத்தீர்த்தம் முதன் முதலில் வந்ததால் ஆதி தீர்த்தம் என்ற பெயர் பெற்றது. அது போல், ஞானத்தை அளிக்கும் தீர்த்தம் ஆனதால் ஞான தீர்த்தம் என்றும், பரம தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது. அது போல் இக்குளத்தில் குளித்தால் முக்தி தரும் தீர்த்தமாதலால், முக்தி தீர்த்தம் என்ற பெயரும் பெற்றது. முன்னொரு காலத்தில் இக்குளத்தில் ஒரு கொக்கு தவம் செய்தது. அப்பொழுது, அங்கிருக்கும் மீன்கள் அத்தவத்தை கலைக்க முற்பட்டது. இதனால், தவம் முடிந்து வரம் கேட்கும் நேரத்தில், இங்கு எந்த மீன்களும் வசிக்கக்கூடாது என்ற வரத்தையும் கொக்கு வாங்கிக் கொண்டதால், இக்குளத்தில் இன்றும் எந்த மீன்களும் வசிப்பதில்லை. இக்குளத்தில் தான் சங்கப் பலகை மிதக்க விட்டு எந்த பாட்டுகளும், கவிதைகளும் இலக்கியத்திற்கு ஏற்றவை என்று சோதனை செய்யப்படும். அப்படி அவை ஏற்றவை அல்லாதவையாக இருந்தால், அந்த கவிதைகள் தண்ணீரில் மூழ்கி விடும். மற்றவை கரையில் சேர்க்கப் படும். அப்படி சோதித்து தேற்வு பெற்றதில் திருக்குறளும் ஒன்று.

கோபுரங்கள்; கோபுரங்களுக்கு பிரசித்தி வாய்ந்த கோவில்களுள் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலும் ஒன்று. மொத்தம் 14 கோபுரங்கள் இக்கோவிலில் உள்ளது. அவைகளுள் ஒன்பது அடுக்கு ராஜகோபுரங்கள் நான்கு உள்ளன. இந்த ராஜகோபுரங்கள் கோவிலின் நான்கு திசைகளிலும் உள்ளது. அதன் பெயர்கள் கிழக்கு ராஜ கோபுரம், மேற்கு ராஜ கோபுரம், தெற்கு ராஜ கோபுரம் மற்றும் வடக்கு ராஜ கோபுரம் ஆகும். பிறகு ஏழு அடக்கு சித்திரை கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுரத்தை அம்மன் சந்நிதி கோபுரம் என்றும் சொல்லலாம். இக்கோபுரத்தில் பல சிற்பங்கள் உள்ளதால் இதற்கு சித்திரக் கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. அடுத்தது ஐந்து அடுக்கு கோபுரங்கள் ஐந்து உள்ளன. அவை கோபுர நாயக கோபுரம் அல்லது சுவாமி சந்நிதி கோபுரம், முக்குருணி வினாயகர் கோபுரம் அல்லது நடுகாட்டு அல்லது இடைக்காட்டு கோபுரம், சின்ன மொட்டை கோபுரம், கடஹ கோபுரம் மற்றும் மர கோபுரம் உள்ளன. அடுத்து மூன்று அடுக்கு கோபுரம் இரண்டு உள்ளன. அவை அம்மன் சந்நிதி கோபுரம் மற்றும் சுவாமி சந்நிதிகள் ஆகும். பிறகு கடைசியாக இரண்டு தங்க கோபுரங்கள் உள்ளன. அவை இந்திர விமானம் கொண்ட சுவாமி சந்நிதி மற்றும் அம்மன் சந்நிதியில் உள்ளது. சுவாமி சந்நிதியில் உள்ள தங்க கோபுரத்தில் எட்டு யானைகளும், முப்பத்தி இரண்டு சிங்களுகளும், அறுபத்தி நான்கு சிவகணங்களும் இக்கோபுரத்தை தாங்குவது போல் காட்சி அளிக்கும். இது பார்க்கவே மிகவும் அழகாக இருக்கும். ஆக இந்த பதிநான்கு கோபுரங்களும் இக்கோவிலில் சுற்றி அமைந்து கோவிலின் வெளி தோற்றம் மிகவும் அகலமாகவும், அழகாகவும் காட்சி அளிக்கும்.

மண்டபங்கள்; கொலு மண்டபம், கிளிகூண்டு அல்லது சங்கிலி மண்டபம் அல்லது யாழி மண்டபம், இருட்டு மண்டபம் அல்லது முத்துப்பிள்ளை மண்டபம், ஆறுகால் மண்டபம், அஷ்டசக்தி மண்டபம், வெள்ளியம்பல மண்டபம், அறுபத்தி மூன்று நாயன்மார்கள் மண்டபம், வன்னியடி நடராஜர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், நால்வர் மண்டபம் (அப்பர், சுந்தர ர், மாணிக்கவாசகர் மற்றும் திருதாவுக்கரசர்), மீனாட்சி நாயகர் மண்டபம், சுவாமி சந்நிதி கருவரை மண்டபம் சுவரொற்றி தக்ஷிணாமூர்த்தி மண்டபம், துர்கை மண்டபம் மற்றும் லிங்கோதுபவர் மண்டம்ப் உள்ளது. அது தவிர நூரு கால் மண்டபம் அல்லது மண்டப நாயக மண்டபம், கல்யாண மண்டபம், நகரா மண்டபம், புது மண்டபம், முத்துராமையர் மண்டபம், பேச்சியக்காள் மண்டபம், நந்தி மண்டபம், மங்கயர்க்கரசி மண்டபம், தேரடி மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம் மற்றும் பழைய ஊஞ்சல் மண்டபம் என்று பல மண்டபங்கள் உள்ளன.

அஷ்டசக்தி மண்டபம்; இந்த மண்டபத்தை திருமலை நாயகரின் மனைவிகள் கட்டினார்கள். இந்த மண்டபத்தில் எட்டு சக்திகளான கௌமாரி, ரௌத்திரி, வைஷ்ணவி,ஞானரூபிணி, மகாலக்ஷ்மி,மகேஷ்வரி, ஷாமளா மற்றும் மணோண்மணியின் சிலைகள் இருக்கும்.

முத்துராமையர் மண்டபம்; இந்த மண்டபத்தில் தான் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாக்ஷி விக்ரகங்கள் உள்ளன. இந்த மண்டபத்தில் தான் அன்னதானம் நடக்கும்.

தேரடி மண்டபம்; இந்த மண்டபத்தில் தான் மீனாக்ஷி அம்மனையும் மற்றும் சுந்தரேஸ்வரரையும் அமர்த்தி பின் ஊர்வலம் வருவார்கள். புது ஊஞ்சல் மண்டபம்; இந்த புது ஊஞ்சல் மண்டபத்தில் தான் அம்பாளையும் சிவனையும் அமர்த்தி ஊஞ்சலாட்டும் வைபோகம் நடக்கும்.

கொலு மண்டபம்; இந்த மண்டபத்தில் தான் நவராத்திரி நேரத்தில் பல விதமான கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து கொண்டாடுவார்கள்.
இன்னும் இந்த கோவிலின் அழகையும் அமைப்பையும் சொல்லச்சொல்ல முடியாத ஒன்று. நீங்களே நேரில் சென்று கண்டு களிங்கயேன்.
இந்த மீனாட்சி அம்மனின் பாடலை கேட்டு மகிழ இங்கே பார்க்கவும்.இந்த பாட்டின் வரிகளை படிக்க என் முந்தய பதிவிலுள்ளதை பார்க்க இங்கே பார்க்கவும்.

8 comments:

Anonymous சொன்னார்

Thanks!!

அன்புத்தோழி சொன்னார்

வருகைக்கு நன்றி அனானி

cheena (சீனா) சொன்னார்

மதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலைப் பற்றி இவ்வளவு அழகாக வர்ணித்து விரிவானதொரு கட்டுரை இது வரை யாரும் எழுதியது இல்லை.
தொடர்க - வாழ்த்துகள்

அன்புத்தோழி சொன்னார்

சொன்னபடியே வந்துட்டீங்க திரு சீனா. மீண்டும் வருகைக்கு நன்றி.

காரூரன் சொன்னார்

நல்ல கட்டுரை. நான் இந்த மதுரை மீனாட்சிக்கு அடிக்கடி போய் வந்த அனுபவம் உண்டு. அதனை மீண்டும் என் மனத்திரைக்கு கொண்டு வர உங்கள் கட்டுரை உதவியது.
நன்றிகள். ஆண்டாள் கோயிலை பற்றியும் ஒன்று தாருங்களேன். அந்த ஊரில் தான் ஆண்டுகள் சிலவற்றை கழித்தவன்.

Unknown சொன்னார்

hello aubhuthozhi,
this ramakannan from mysore. very nice to see ur second part of lord meenakshi amman temple. please like that write about temple.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னார்

ம்ம்ம்,நல்ல தகவல்கள் எழுதுறீங்க..தொடர்க..

www.bogy.in சொன்னார்

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in