Wednesday, July 18, 2007

வைத்தீஸ்வரன் கோவில்

நாம் இந்த வாரத்தின் கோவிலாக திரு வைத்தீஸ்வரன் ஆலயத்தை பற்றி பார்ப்போம். இந்த ஆலயம் கும்பகோணத்திலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் அமைப்புத் தோற்றம் நான்கு ராஜ கோபுரத்துடனும், நடுவில் ஆங்காங்கே பல தீர்த்தங்களுடனும் பார்க்கவே அழகாக இருக்கும். இத்திருதலத்தின் மகிமையை திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும், அருணகிரிநாதரும் போற்றி பாடியிருக்கிறார்கள். இத்தலத்திற்கு புள்ளிருக்குவேளூர் என்ற திருப்பெயரும் உண்டு. ஏனெனனில் புள் என்றால் ஜடாயு, இருக்கு என்றால் ரிக்வேதம், வேள் என்றால் முருகன், ஊர் என்றால் சூரியன். இந்நால்வரும் வழிபட்ட இடமாதலால் இப்பெயர் பெற்றது.

மூர்த்திகள்; இங்கிருக்கும் சிவனின் பெயர் வைத்திய நாதர், அம்பாளின் பெயர் தையல் நாயகி. பல தீர்க்க முடியாத நாலாயிரத்து நானூற்றி நாப்பத்தெட்டு நோய்களையும் தீர்த்து வைக்க சிவனும், அவருக்கு உதவியாக அம்பாளும் தன் கையில் தைல பாத்திரமும், வில்வ மரத்தடி மண்ணும், சஞ்சீவியும் ஏந்தி,

கயிலையிலிருந்து கிளம்பி இத்திருத்தலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள். மற்றபடி இங்கு முருகன் செல்லக்குழந்தையாக செல்வமுத்துக்குமரனாக அமர்ந்து அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் தான் முருகன் சூரபத்மனை வெல்ல வேல் வாங்கினார் என்ற பெருமையும் சாரும்.




இன்னும் செவ்வாய் ஸ்தலமாகவும் இத்தலம் விளங்குவதால் செவ்வாய் தோஷம், மற்றும் குடும்ப ஒற்றுமைக்காவும், வியாதிகளுக்காவும் அங்காரகனை வணங்கினால் தீரும் என்பது உறுதி. மற்றும் இத்தலத்தில்


நவகிரகங்கள் வக்கிரமில்லாமல், சிவனின் சந்நிதிக்கு பின்புரத்தில் வரிசையாக நின்று நோய்கள் தீர வேண்டி பிராத்திக்கும் காட்சியும்
தனி சிறப்புகளுள் ஒன்று.


தீர்த்தங்கள்; இக்கோவிலில் பல தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் சித்தாமிர்த தீர்த்தம் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. இத்தீர்த்தத்தில் சித்தர்கள் இறைவனுக்கு அபிஷேகித்த தேவாமிர்த்தத்தை கலந்ததால் இப்பெயர் பெற்றது. அது மட்டும் அல்லாமல் அங்கரகனின் செங்குஷ்டத்தை தீர்த்த தீர்த்தமாக விளங்குவதால் இப்பெயர் பெற்றது எனவும் கூறலாம். இன்னும் காமதேனு, கிருதாயுகத்தில், தன் முலைப்பாலால் இறைவனுக்கு செய்த அபிஷேகம் தான் இன்று தீர்த்தமாக உருவாகியிருக்கிறது என்றும் வரலாறு கூறுகிறது. இதனால் தான் இத்தீர்த்தத்திற்கு கோக்ஷர தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது. இதைத்தவிர இத்திருதலத்தில் கோதண்ட தீர்த்தம், அங்க சந்தான தீர்த்தம் என்ற மற்ற தீர்த்தங்களும் உள்ளன. இங்கு முன்னொரு காலத்தில் சதானந்த
முனிவர் தவம் செய்துக்கொண்டிருந்த போது, பாம்பிடமிருந்து தப்பிக்க தவளை தண்ணீருக்குள் குதித்தபோது அந்த தண்ணீர் அவர் மீது தெளித்து தவத்தைக் கலைத்தது. இதனால் இங்குள்ள தீர்த்தத்தில் தவளையும், பாம்பும் வாசம் செய்யக் கூடாதென்று முனிவர் சிபித்ததால், இத்தீர்த்தங்களில் இப்பொழுதும் தவளைகளும், பாம்பும் வசிப்பதில்லை. இன்னும் இந்திரப்பதி, கௌதம, சர்வமுக்தி போன்ற பல தீர்த்தங்களும் உள்ளன.


ஜடாயு குண்டம்; இராவணன் சீதையை கவர்ந்து இழுத்துச் செல்லும் போது, ஜடாயு சீதையை காப்பாற்ற முயச்சித்தார். அப்பொழுது ஜடாயுவின் இரு சிறகுகளையும், இராவணன் வெட்டி வீழ்த்தினான். பின் ராமர் வந்ததும் நடந்ததைக் கூறிய ஜடாயு, தன்னை வைத்தீஸ்வரன் கோவிலில் தகணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டு, அவர் காலடியில் உயிர் துரந்தார். ராமரும்
ஜடாயுவின் வேண்டுகோளின் படி அவரை இக்கோவிலில் தகணம் செய்தார். இந்த இடத்திற்கு பெயர் ஜடாயு குண்டம். இந்த குண்டத்தில் இருக்கும் திரு நீற்றினை வேண்டி இட்டுக் கொண்டால் நோய்கள் திரும்.


திருசாந்துருண்டை; இந்த மருந்து வைத்தீஸ்வர்ர் கோவில் பிராசாதமாக வழங்கப் படுகின்றது. இந்த மருந்தைத்தான் அங்காரகனின் குஷ்ட நோயை தீர்க்க இறைவன் அருளினார் என்று புராணம் கூறுகின்றது. இந்த மருந்ததை செய்யும் முறை என்னவென்றால் ஜடாயு குண்டத்திலிருந்து விபூதியையும், சித்தாமிர்த தீர்த்தத்தையும் குழைத்து வேண்டி முத்துக்குமார ஸ்வாமி
சந்நிதியிலுள்ள அம்மியில் வைத்து அரைத்து, அதை உருட்டி அம்மன் திருவடியில் வைத்து பிரார்த்தனை செய்து சிவனின் திருவடிகளில் வைத்து பின் வேண்டியவர்களுக்கு வினியோகம் செய்யப் படுகிறது. இதனை உண்டால் தீராத வியாதிகளும் தீரும் என்பது உறுதி.


இத்தலத்தில் விசேஷங்கள் என்று கூறினால், முருகனுக்கு ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்தில் சந்தனத்தால் அபிஷேகம் செய்வது மிகவும் பிரசித்திப் பெற்றது. பின் தினமும் சிவனுக்கும், அம்பாளுக்கும் ஆறு கால பூஜைகள் நடைப்பெரும், பின் பங்குனி பிரம்மோற்ச்சவமும் மிகவும் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலில் முருகன் செல்லக் குழந்தையானதால் அவரை தூங்க வைத்த பின்புதான் சிவனுக்கு அர்த்த ஜாம பூஜை நடைப்பெரும். பின் அங்காரகனுக்கு ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும், அபிஷேகம் செய்து ஆலயம் முழுவதும் வலம் வரும் சம்பவம் ஏற்படும்.

6 comments:

வடுவூர் குமார் சொன்னார்

கல்யாணம் ஆன புதிதில் ஒரே ஒரு தடவை போய் இருக்கிறேன்.

அன்புத்தோழி சொன்னார்

மற்றும் ஒரு முறை முடிந்த போது போய் வாருங்கள் திரு குமார். வருகைக்கு நன்றி.

Anonymous சொன்னார்

this is our kuladeivam temple.I am really happy see the review about our temple.The review is too good and Keep it up..


RamaKannan

அன்புத்தோழி சொன்னார்

அடடே இது உங்க குலதெய்வம் கோவிலா. மிகவும் சந்தோஷம்.
வாழ்த்துக்கு நன்றி திரு ரமாகண்ணன்.

அன்புத்தோழி சொன்னார்

யாரென்று எனக்கு தெரிந்து விட்டது. மற்ற படி email அல்லது தொலைப்பேசி மூலம் பேசிக் கொள்ளலாம் திருமதி ரமா கண்ணன்.

karthi சொன்னார்

அன்புதோழி இந்த கோவிலுக்கு எப்படி செல்வது என எனக்கு விளக்கமாக சொல்லவும் மற்றும் உங்கள் ப்ளாக் வடிவமைப்பு அருமை

ப்ளாக் வடிவமைப்பை பற்றி எனக்கு தமிழில் மெயில் அனுப்பவும் உங்கள் உதவியை எதிபார்க்கிறேன் எனது ஈமெயில் sonofcoimbatore @gmail .com