Friday, March 2, 2007

பாகற்காய் கறி

தேவையான சாமான்கள்:

பாகற்காய் கால் கிலொ
புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு ஒரு டேபில் ஸ்பூன்
கொஞ்சம் மஞ்சள் பொடி
மேலே தூவ: பருப்புகள் வறுத்து திரித்தப் பொடி 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டீஸ்பூன்
தாளிக்க சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய்

செய்முறை:

பாகற்காயை துண்டம் துண்டமாவோ அல்லது வட்ட வட்டமாகவோ நறுக்கிக் கொள்ள வேண்டும். பாகற்காயை தண்ணீரில் போடக் கூடாது. அதனால் நறுக்குவதற்கு முன்பாகவே அலம்பிக் கொள்ள வேண்டும். அடுப்பை மூட்டி வாய் அகன்ற பாத்திரத்தில் புளியைக் கரைத்து ஊற்ற வேண்டும். அதில் உப்பு, மஞ்சள் தூளைச் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து வரும் போது நறுக்கிய பாகற்காயைப் போட வேண்டும். நன்றாக வெந்து வரும் போது அடுப்பை ஸ்ம்மில் வைத்து தட்டு போட்டு மூடி விட வேண்டும். இடை இருமுறை கிளரி விட வேண்டும். இளம் காயானால் ஐந்து நிமிடத்தில் வெந்து விடும், முற்றல் காயானால் பத்து நிமிடம் எடுத்துக் கொள்ளும். காய் நன்றாக வெந்தப்பின் வடிதட்டில் வடிகட்டி வைத்துக் கொள்ளவும் (மிகவும் குழைந்து விடக் கூடாது). அதன் பின் அடுப்பில் வாணலியை வைத்து தாராளமாக எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்தவுடன் கரிவேப்பிலைச் சேர்க்கவும். அதில் வெந்த காயைப் போட்டு நன்றாக கிளரவும்.
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு வருத்து பொடித்து வைத்தக் கலவையை இரண்டு ஸ்பூன், கொஞ்சம் மிளகாய் பொடி அல்லது சாம்பார் பொடி சேர்த்துப் போட்டு மேலாக கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி தேங்காய் பூ துருவியது கொஞ்சம் போட்டு இரண்டு கிண்டு கிண்டி இறக்கவும்.

0 comments: