Monday, March 5, 2007

புடலங்காய் கறி

தேவையான சாமான்கள்:

புடலங்காய் கால் கிலோ
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
உப்பு இரண்டு டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன்
தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய்

செய்முறை:

புடலங்காயை தண்ணீர் விட்டு அலம்பிய பிறகு சிறுசிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு அடுப்பை மூட்டி வாணலியை வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், எண்ணெய் விட்டு தாளிக்கவும். நன்றாக சிவந்து வெடித்தப்பின் கரிவேப்பிலையும் போட்டு கிளரி விட்டு, புடலங்காய் துண்டுகளை அதில் சேர்த்து கிளரி விடவும் (தண்ணீர் நன்றாக வடிந்தப்பின் தான் அடுப்பில் போட வேண்டும்). பிறகு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கிளரி விட்டு அடுப்பை ஸிம்மில் வைத்து 6,7 நிமிடங்கள் காயை மூடி வைக்க வேண்டும். இடையே இருமுறை மூடியைத் திறந்து கிளரி விட வேண்டும். நன்றாக வெந்தப்பின் தேங்காய் துருவலையும் போட்டு சேர்த்து வதக்க வேண்டும். காய் நன்றாக வதங்கியப் பின் சிறிது தேங்காய் எண்ணெய்யை காய் மேலே பரவலாக விட்டு கிளரி இறக்கவும்.

0 comments: