Thursday, March 22, 2007

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது

எல்லோருக்கும் வணக்கம்,

நான் இன்று "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது" என்ற திரைப்படம் பற்றி எண் எண்ணங்களை கூறுகிறேன். இந்தப் படம் நான் பார்த்து ஒரு மாதம் ஆயிற்று. இந்தப் படத்தில் பரத் கதாநாயகன், மல்லிகா கபூர் கதாநாயகி, மற்றபடி அருண்குமார், தீபு இதில் நடித்திள்ளார்கள். படத்தில் முதல் காட்சி சண்டைப் படம் மாதிரி தோன்றும், ஆனால் இது சிரிப்பு மற்றும் பாசம் கலந்த படம். இதில் பரத் தன் காதலியைத் தேடி சென்னை வருகிறார். ஆனால் அவருடைய காதலி தீபு வேரு ஒருவனைக் காதலிக்கிறாள். அதேபோல் தன்னுடைய காதலியை காதலிக்கும் காதலன் அருண்குமார். அவரை ஒரு பெண் காதலிக்கிறாள், அவள் பெயர் மல்லிகா கபூர். இவர்கள் இருவருமாக சேர்ந்து அவர்களுடைய காதலைப் பிரிக்க சதி திட்டம் செய்கிறார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. ஆனால் இருதியில் இருவரும் நீ, நான் என்ற போட்டியில் சண்டை போட்டு அவர்களே பிரிந்து விடுகிரார்கள். இதற்கு இடையில் பரத் ஒரு ஹோட்டலில் பாஸ்க்கரை சந்திக்கிறார். இவராலும் மல்லிகா கபூராலும் பாஸ்க்கரின் சர்வர் வேலை போய்விடுகிறது. பிறகு ஒரு நாள் அருண்குமார் அலுவலகத்தில் பாஸ்க்கரை, பரத் சந்திக்கிறார். அப்பொழுது பாஸ்கரிடம், பரத்திற்கு பழக்கம் ஏற்படுகிறது. அப்பொழுது தான் எதற்காக சென்னைக்கு வந்ததாக பரத் கூறுகிறார். அவருடைய அம்மா ரேணுகா, ஒரு பெண்ணைப் பார்த்து இவள் தான் தனக்கு மருமகளாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் இந்த விஷயம் எதுவுமே அந்த பெண்ணிர்க்கு தெரியாது. ஒருநாள் கல்லூரி விழாவிற்காக ஒத்திகை நடக்கும் நேரத்தில் பரத் அந்த பெண்ணை சந்திக்கிறார். அவரைப் பார்த்தவுடன் தன் மனதை பரி கொடுக்கிரார். இது எல்லாவமே ஒரு தலை பட்ச காதல் தான். ஆனால் அவர் அங்கு பார்த்த பெண் தீபு இல்லை, மல்லிகா கபூர். ஆனால் மல்லிகா கபூர், அருண் குமாரை ஒரு தலை பட்சமாக காதலிக்கிறார். ஆம் அருண்குமாருக்கு, மல்லிகா கபூரை தெரியவே தெரியாது. தன்னுடைய காதலியின் ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்க்காக அருண்குமாரிடம் வேலைக்கு சேர்கிறார். பின்பு பரத், அருண்குமாரின் மனதை மாற்றி இவரை மல்லிகா கபூரை காதலிக்க செய்கிறார். அருண்குமார் காதலித்த தீபு, வேரு ஒருவனை காதலிக்க ஆரம்பிக்கிறார். கடைசியில் நந்தினி கபூருக்கும், அருண்குமாருக்கும் திருமணம் நடக்கிறது. பிறகு தான் மல்லிகா கபூருக்கு, பரத்தின் காதலி தாம் தான் என்று தெரிய வருகிறது. தனக்கு தெரியும் என்று காட்டிக் கொண்டால் பரத்திற்கு கஷ்டமாக இருக்கும் என்பதால், அதை சொல்லாமலேயே இருந்து விடுகிறார். ஆக கதை என்றால் பரத் செய்யும் தியாகங்கள் தான். படத்தில் கார்டூன் கலந்து ஆரம்பத்தில் கலகலப்பாக உள்ளது பிறகு சென்டிமென்ட் தான். படம் நன்றாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?

4 comments:

Anonymous சொன்னார்

hmmm.........oh my kadavulleee.............

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னார்

உங்களை வயர்டு தொடர் விளையாட்டுக்கு
கூப்பிட்டு இருக்கிறேன். என் இன்றைய பதிவைப் பாருங்கள்.5 உங்களைப்பற்றிய weird குணங்கள் சொல்லுங்க.

butterfly Surya சொன்னார்

அன்பு தோழி..

இந்த படம் இதுவரை பார்க்கவில்லை..

பார்த்து விட்டு சொல்கிறேன்..

சூர்யா
துபாய்.
butterflysurya@gmail.com

Arun's Thoughts சொன்னார்

தங்கள் மறுமொழிக்கு நன்றி திரு சூர்யா அவர்களே.