Monday, April 9, 2007

நாய்கள் ஜாக்கிரதை

பங்களூரில் நாய்களின் கொண்டாட்டம் மிகவும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனக்கு தெரிந்தே "கோரமங்கலா" என்னும் இடத்தில் நாய்கள் தெருவில் வரும் வண்டிகளை துரத்தும். இப்பொழுது அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஒரு குழந்தையை பல நாய்கள் சேர்த்து கடித்து கொன்றுவிட்டது என்ற செய்தியை கேட்டதிலிருந்து மனம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பாவம் அந்த குழந்தை எவ்வளவு துடித்திருக்கும். அந்த குழந்தையின் தாய் தந்தைக்கு எவ்வளவு மனக்கஷ்டம். மற்றொரு குழந்தையையும் நாய்கள் கடித்திருக்கிறது. அந்த குழந்தையை மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்கள். அது மட்டுமிலாமல் பல பேருக்கு நாய்களினால் வண்டியிலிருந்து விழுந்து கைகால் ஒடிந்து போயிருக்கிறது. இந்த நாய்கள் கண்டதையும் தின்று, அதன் புத்தி பேதலித்து போயிற்று. இதற்கு அரசாங்கம் தான் சீக்கிரம் ஒரு நல்ல முடிவுவாக எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

இதை "The Hindu" செய்தித் தாளில் படித்தேன்.

2 comments:

VSK சொன்னார்

இரு மாதங்களுக்கும் மேலாக வலை பதிகிறீர்கள்!

எப்படிப் பார்க்காமல் இருந்தேன்!

வருக வருக என அழைப்பதற்கு காலம் கடந்துவிட்டது!

எனவே "தருக! தமிழை அள்ளித் தருக!" என வாழ்த்துகிறேன்!

Arun's Thoughts சொன்னார்

நன்றி திரு வி எஸ் கே அய்யா