Tuesday, April 24, 2007

சோம்னாத்பூர்






















 நான் இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள சோம்னாத்பூர் என்னும் இடத்தில் இருக்கும் கேசவ கோவிலைப் பற்றி உங்களிடம் எண் எண்ணங்களை பரிமாறிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இந்தக் கோவிலானது ஹொய்சால ராஜா நரசிம்மா3 (1254-1291 A.D.) வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவிலை கட்டியது சோம்னாத் என்னும் படைத் தளபதி. அவன் இக்கோவிலை காவிரி நதிக்கரையில் அமைத்திருக்கிறான். இவன் இந்த கோவிலை கட்ட பணவுதவியும், உத்தரவும் அந்நாட்டு மன்னனிடம் கேட்டு பெற்று, பின் இருப்பதிலேயே மிகவும் திறமை வாய்ந்த ஹொய்சாலா சிற்பிகளை கொண்டு இந்த கோவிலை கட்டி முடித்தான். இந்த கோவிலை செய்த சிற்பிகளின் பெயர் மல்லிதம்மா, மாசானத்தம்மா, சாமேயா, பாமேயா, மற்றும் பலர். மல்லிதம்மா என்னும் சிறப்புவாய்ந்த சிற்பி இருப்பதிலேயே அதிகமான சிற்பங்களை செதுக்கியுள்ளார். அந்தந்த சிற்பங்களுக்கு கீழே அதை உருவாக்கிய சிற்பிகள் தங்கள் பெயரை செதுக்கியுள்ளார்கள்.




இந்த கோவிலின் அமைப்பு, கோபுர வாசலை கொஞ்சம் உயரமான இடத்தில் வைத்து அதற்கு கீழ் 64 முக்குகள் வைத்து அதில் ஒவ்வொரு இடத்திலும் புராண கதை கொண்ட சிற்பங்களை வடித்துள்ளர்கள். இந்த கோவிலில் வேணுகோபாலர், கேசவர், ஜனார்த்தனர் ஆகியோரின் கர்ப்பகிரகங்கள் உள்ளன. தூண்களிலும், மேற்கூறையிலும் அழகாக வடிவங்களை சிற்பிகள் செதுக்கியுள்ளார்கள். அவை பார்க்க மிகவும் அழகாக உள்ளது. ஆக கோபுரதிற்கு உட்புரத்திலும், வெளிபுரத்திலும் சிற்பங்களாக நிறைந்து அந்த இடமே பார்க்க சொர்கலோமாக தோன்றும்.

இந்த கோவிலை நிறைய படத்தில் காட்சிகளாக பார்க்கலாம் (குறிப்பாக அருணாசலம் படத்தில் அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்ட என்ற பாட்டில் பார்க்கலாம்). இந்த கோவிலை நேரில் பார்த்து ரசித்தால் தான் மனதில் ஆழமாக பதியும். எல்லோரும் இந்த கோவிலில் உள்ள சிற்பங்களை பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த கோவிலைப் பற்றி கூற விரும்பினேன்.










0 comments: