Thursday, August 9, 2007

என்ன குழந்தை தூங்கலையா?

குழந்தையை தூங்க வைப்பது என்பது ஒரு கலை. அப்படி நாம் தேர்ந்தெடுக்கும் வழிகளில் தாலாட்டு பாட்டும் ஒன்று. நாம் எவ்வளவு தான் கூச்ச சுபாவமாக இருந்தாலும், குழந்தைக்கு என்று வரும் போது எல்லாம் எங்கோ பறந்து போய் விடுகிறது. கள்ளங்கபட மில்லா குழந்தை முகத்தை பார்க்கும் போது, யாருமே கண்டிப்பாக கொஞ்ச ஆரம்பித்து விடுவார்கள். அப்படி பட்ட அந்த குழந்தையை தூங்க வைக்க நாம், நமக்கு தெரிந்ததை தாலாட்டாக பாடிக்கொண்டே அதன் கன்னத்தை வருடி விட்டால், அது சுகமாக அப்படியே கண்ணயர்ந்து தூங்கிவிடும். நான் எப்பொழுதுமே என் குழந்தையை தூங்க வைக்க பாடும் பாட்டு இது தான். குழந்தையை தூங்க வைத்துக் கொண்டே கடவுள் பெயர்களை கொண்ட இப்பாட்டை பாடிய புண்ணியமும் கிடைக்கும், குழந்தைகளுக்கும் கடவுளின் பெயர்கள் தெரிய வரும். இது எப்படி இருக்கு....


இந்த பாடலை சுசீலா அழகாக பாடியிருப்பார்கள். படம் சிப்பிக்குள் முத்து. பாட்டை கேட்க இங்கே சொடுக்கவும்.

தடங்கலுக்கு வருந்துகிறேன் (ஒரு வேளை mozilla வில் பாடவில்லையென்றால் Internet Explorer ரில் போட்டு கேளுங்கள்)

லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குரும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி (வரம் தந்த)

ஆரீராரோ ஆரீராரோ, ஆரீராரோ ஆரீராரோ

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
எதுவம்ச வீரனுக்கு யசோதை நானே
எதுவம்ச வீரனுக்கு யசோதை நானே
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே
பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே (வரம் தந்த)

ஆரீராரோ ஆரீராரோ, ஆரீராரோ ஆரீராரோ

ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஸ்ரீராமன் காணும் அந்த கம்ப நாதன் நானே
ஸ்ரீராமன் காணும் அந்த கம்ப நாதன் நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ஆகாய வண்ணனுக்கு தியாகையர் நானே
ஆகாய வண்ணனுக்கு தியாகையர் நானே (வரம் தந்த)

ஆரீராரீ ராரீராரோ, ஆரீராரீ ராரீராரோ

5 comments:

வடுவூர் குமார் சொன்னார்

"சுவாதி முக்த்யம்" என்ற தெலுங்கு படத்தில் இந்த பாடலை முதல் முதலில் கேட்டபோது எனக்கே தாலாட்டுக்கிற மாதிரி இருந்தது.

அன்புத்தோழி சொன்னார்

வாங்க வடுவூர் குமார். தமிழிலும் கேளுங்கள் , தெலுங்கில் கேட்டது போலவே இனிமையாக இருக்கும்.

தி. ரா. ச.(T.R.C.) சொன்னார்

தலாட்டு என்றாலே' கண்ணே கண்மணியே கண்ணுறங்கு" என்று தாயார் பாடி குழந்தையை தூங்கவைக்கும் காட்சிதான் ஞாபகம் வருகிறது. மாமன் அடிச்சாரோ மல்லிப்பூ செண்டாலே, அத்தை அடிச்சாளோ அரளிச்செடி விளாராளே

CVR சொன்னார்

மனதை உருக வைக்கும் பாடல்!!
எனக்கு மிகவும் பிடித்தமானது!!
பதிவிட்டதற்கு நன்றி!! :-)

அன்புத்தோழி சொன்னார்

எனக்கும் பிடித்த பாடல் இதுவே. நன்றி திரு சி வி ஆர்