Thursday, February 22, 2007

தீபாவளி

நான் இப்பொழுது கடைசியாக பார்த்த படம் "தீபாவளி", எதற்காக இந்த தலைப்பு வைத்தார்கள் என்று இந்த நிமிடம் வறை எனக்கு தெரியவில்லை. படம் பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும். வழக்கம் போல் "மறதி" யை பற்றி தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இதில் கொஞ்சம் வித்யாசம் என்னவென்றால் கடந்த மூன்று வருட காலத்தில் நடந்தது மட்டுமே மறந்து போயிற்று. பின் நம் கதா நாயகி ஒருவனை காதலிக்கிறாள். பின் வழக்கம் போல் அவளின் தந்தையிடமிருந்து எதிர்ப்பு. அதனால் நம் கதா நாயகன் வருங்கால மாமனாரிடம் உதை வாங்குகிறார். அந்த அதிர்ச்சியில் மறுபடியும் பழைய சம்பவங்கள் கதா நாயகிக்கு மறந்து விடுகின்றன. பின்பு நம் கதா நாயகியை தொடர்ந்து சென்று அவளை மறுபடியும் காதலிக்க வைக்கிறார் நமது கதா நாயகன். இது தான் கதை. உங்கள் கருத்தை வரவேற்க்கிறேன்.

நன்றி

அன்புத்தோழி

0 comments: