Friday, February 23, 2007

குழந்தை உரைமருந்து

வணக்கம்,

நான் இன்று குழந்தைக்குத் தரும் உரைமருந்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். உரைமருந்து என்பது இயற்கை மருந்தை ஒரு கல்லில் அல்லது சந்தனக்கட்டை உறைக்கும் கல்லில் உறைத்துக் கொடுக்க வேண்டும். அதாவது சுக்கு, மிளகு, வசம்பு (பிள்ளை வளப்பான்), ஜாதிக்காய், மாசிக்காய் இவற்றை உரைத்து தாய்ப்பாலுடன் சேர்த்து குழந்தைளுக்கு பிறந்த பத்து நாளைக்குப் பின் கொடுக்க வேண்டும். முதலில் ஐந்து முறை உரைத்துக் கொடுக்க வேண்டும், ஆனால் ஜாதிக்காயையும், மாசிக்காயையும் எப்பொழுதுமே குறைத்துக் கொடுக்க வேண்டும். இதை ஆறு மாதம் வறை ஒரு நாள் விட்டு, ஒரு நாள் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் குழந்தைக்கு ஜீரண சக்தி அதிகரிக்கும், இதனால் அதிகமாக கக்காமல் இருப்பார்கள். அதிலும் வசம்பு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஆறு மாதத்திற்க்கு பிறகு அளவை கொஞ்சம் அதிகரித்து அதாவது பத்து முறை வறை உரைத்துக் கொடுக்கலாம், ஆனால் வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால் போதும். அதே போல் உஷ்ணமான ப்ரதேசத்தில் வாழ்பவர்கள் கொஞ்சம் சந்தன கட்டையும் லேசாக உரைத்துக் கொடுத்தால் குழந்தையின் உடம்பு சிறிது குளிர்ச்சியாக இருக்கும், ஆனால் குழந்தைக்கு ஐந்து மாதமாவது ஆகியிருக்க வேண்டும். குழந்தைகளுக்கு வயிற்று வலித்தால் வசம்பை அடுப்பில் காய்த்து நன்றாகப் பொடித்து திப்பி இல்லாமல் தாய் பாலுடன் சேர்த்துக் கொடுக்கலாம். இல்லையானால் வெற்றிலையில் வெளக்கெண்ணையை தடவி அடுப்பில் வெதுவெதுப்பாக அதாவது குழந்தை உடம்பு தாங்கும் வறை வைத்துப் பின் குழந்தையின் வயிற்றில் வைக்க வேண்டும். இப்படிச் செய்தால் மலம் வெளியில் வெளியேறி, குழந்தைக்கு வயிற்று வலி குணமாகும். இதைப்போல் மலம் வெளி்யேறாமல் குழந்தை வயிறு கல் போல் இருந்தாலும் செய்யலாம்.

நன்றி

அன்புத்தோழி

0 comments: