Wednesday, February 28, 2007

திருக்கடையூர்


நான் இன்று திருக்கடையூர் ஸ்தலத்தைப் பற்றி உங்களோடு பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். இந்தக் கோவில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. சிவனின் பெயர் அமிர்த கடேஸ்வரர், அம்பாளின் பெயர் அபிராமி. இந்தக் கோவிலானது, மூன்று விதமான சிறப்புகளைப் பெறப் பெற்றுள்ளன.

1. அந்தக் கோவிலில் உள்ள பிள்ளையார்.
2. எமனிடமிருந்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றிய சிவலிங்கம்.
3. அபிராமி பட்டரைக் காப்பாற்றிய அம்பாள்.

முதலில் வினாயகரைப் பற்றி சொல்லுகிறேன். முன்னொரு காலத்தில், தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பார்க்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தார்கள். ஆனால் அதற்காக, அவர்கள் முழு முதற் கடவுளான வினாயகரை ப்ராத்திக்க மறந்து விட்டார்கள். அதனால், வினாயகர் அந்த அமிர்தத்தை எடுத்து கொண்டு வந்து திருக்கடையூரில் ஒளித்து வைத்து விட்டார், பிறகு உண்மை அறிந்து, வினாயகரிடம் மன்னிப்பு கேட்டு, தேவர்கள் அந்த அமிர்தத்தை அருந்தினார்கள்.


2. எமனிடமிருந்து மார்க்கண்டேயரைக் காப்பாற்றிய சிவலிங்கம்:

முன்னொரு காலத்தில், ம்ரிகண்ட முனிவர் என்பவர், தனக்கு புத்திர பாக்கியம் பெற சிவனை எண்ணி தவம் இருந்தார். அவருக்கு காட்சி அளித்த பரமேஸ்வரன், அரிவிற்சிறந்தவனாகப் பிறந்து பதினாரு வயது வறை வாழும் புத்திரன் வேண்டுமா, இல்லையானால் முட்டாளாகப் பிறந்து நீண்ட காலம் வாழும் புத்திரன் வேண்டுமா என்று முனிவரிடம் கேட்டார். அதற்கு முனிவர், தனக்கு சில காலமே வாழும் புத்திரன் இருந்தாலும் போதும், ஆனால் அவன் அறிவோடு இருக்க வேண்டும் என்று வரம் பெற்றார். பிறகு அந்த முனிவருக்கு குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டன் என்று பெயர் சூட்டினார். அவனிடம் நடந்தவற்றைக் கூறி சிவனை எண்ணி தவம் செய்யும் படியும் கூறினார். ஆகையால் மார்க்கண்டேயனும், சிவனை எண்ணி பெரும் தவம் புரிந்தார். அவனுக்கு பதினாறாவது காலம் எட்டியது, அந்த நேரத்தில் எமதர்மன், அவனுடைய உயிரைக் கொண்டுப் போவதற்காக அவனை நெருங்கினார். ஆனால் சிவன் அங்கு தோன்றி, மார்க்கண்டேயன் தன்னை சரண் அடைந்தால், அவனுடைய உயிரைக் கொண்டுச் செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் எமன், சிவனை மதிக்காமல் தன்னுடைய பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீசினார். அப்பொழுது அவன், சிவனை கட்டிக் கொண்டு இருந்ததால், அந்தப் பாசக்கயிறு சிவனையும் சேர்த்து சுத்தியது. இதனால் கோபம் அடைந்த சிவன், எமனை தன் காலால் மிதித்து, அவனுடைய சக்தியை கைப்பற்றினார். இதனால், தான் செய்த தவறை எண்ணி, எமன் சிவனிடம் மன்னிப்புக் கேட்டு விடைப் பெற்றுக் கொண்டார். பிறகு மார்க்கண்டனுக்கும் என்றும் பதினாறு வயதாக வாழ்வாயாக என்று சிவன் வரம் அளித்தார்.

இதனால் தான் யாருக்காவது, எதாவது நோய் இருந்தால், இங்கு வந்து பரிகாரம் செய்வதாக வேண்டிக் கொள்வார்கள், அல்லது அறுபதாம் திருமணம் செய்துக் கொள்வார்கள். குழந்தைக்கு நோய் வந்தால், இங்கு வந்து காது குத்துவார்கள், அல்லது பூனல் கல்யானம் செய்வார்கள். குறிப்பாக நோய் நீங்குவதற்கு, இந்த ஸ்தலம் புகழ் பெற்றதாகும்.


3. அபிராமி பட்டரைக் காப்பாற்றிய அம்பாள்.

அபிராமி பட்டர் என்பவர், அம்பளின் பூரண பக்தர். தன் வாயால் மனிதர்களைப் புகழ்ப் பாட்டு பாட மாட்டார். இதை அறிந்த அந்த நாட்டு மன்னன், இவரை தன் அரண்மனைக்கு வரச் செய்தார். அபிராமி பட்டரைப் பார்த்து இன்று அமாவாசையா, அல்லது பௌர்னமியா என்று அந்த மன்னன் கேட்டார். என்நேரமும் அம்பாளையே எண்ணிக் கொண்டிருந்ததால், பௌர்னமி என்று வாய் தவறி கூறிவிட்டார். இதனால் கோபம் கொண்ட மன்னன், அபிராமி பட்டரை சிறையில் இட்டார். இதனால் மன வேதனை அடைந்த பட்டர், அம்பாளை எண்ணி நூறு பாடல்களை அந்தாதியாகப் பாடினார், ஆகையால் அபிராமியும் மனம் குளிர்ந்து, தன் காதிலிருந்த காதணியை எடுத்து எரிந்தார், அது முழு பௌனமி நிலவாக மாறியது. இதனால் தன் தவறை உணர்ந்து, அபிராமி பட்டரிடம் மன்னன் மன்னிப்புக் கேட்டான்.

குறிப்பு: அந்தாதி என்பது, ஒரு பாடலின் கடைசி வார்த்தையிலிருந்து, அடுத்த பாடலின் முதல் வரியாக அமைவது.

நன்றி

அன்புத்தோழி

1 comments:

Anonymous சொன்னார்

Very informative post.

Could you email me to gchandra@gmail.com

I need to ask you more info. on this.

thanks
ganesh