Thursday, February 22, 2007

பீன்ஸ் உசிலி

தேவையான சாமான்கள்:

பீன்ஸ் கால் கிலொகிராம்
உப்பு ஒன்ற்ரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு சிட்டிக்கை
நூறு அல்லது ஐம்பது கிராம் துவரம் பருப்பு
இரண்டு மிள்காய் வற்றல்
தாளிக்க சிறிது கடுகு, உளுத்தம் பருப்பு, எண்ணெய்

செய்முறை:

பீன்ஸை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக அரிந்து கொள்ள வேண்டும். பின்பு அடுப்பை மூட்டி அதில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு மஞ்சள் பொடி போட்டு ந்ன்றாக கொதித்தப்பின் அதில் ந்றுக்கிய காயைப்போட்டு நன்றாக கொதித்து வேகவிட வேண்டும். பாதி வேகும் போது அடுப்பை சிம்மில் வைத்து காயை மூடிப்போடவும். ஐந்து நிமிடத்தில் காய் வெந்து விடும். (காய், உசிலி போன்றவற்றுக்கு குழைய விட கூடாது). காய் வெந்த பின் வடிதட்டில் கொட்டி வெந்த த்ண்ணீரை வடித்து விடவும்.

பருப்பை உசிலிக்கும் முறை: துவரம்பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊரிய பின் களைந்து தண்ணீரை வடித்து விட்டு அத்துடன் மூன்று மிளகாய் வற்றல், சிறிதளவு உப்பு, பெருங்கயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அறைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பை மூட்டி அதில் வைத்து அறைத்த விழுதை போட்டு பக்குவமாக ஸிம்மில் வைத்து கிண்ட வேண்டும். ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடம் வறை ஆகும். கிளரி, கிளரி விட பருப்பு விழுது உதிர்ந்து "உப்புமா" போல் ஆகி விடும். ஒன்றொடு ஒன்று சேராமல் உதிர வேண்டும். அதை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் வெந்த பீன்ஸை எடுத்து வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பை தாளித்து கரிவேப்பிலை சேர்த்து கிளரி விட வேண்டும். காய் நன்றாக துவண்டு வரும் போது உசிலித்த பருப்பை சேர்த்து வதக்க வேண்டும். இரண்டு நிமிடம் உசிலி, காய் இரண்டையு
ம் சேர்த்து வதக்கிய பின் இறக்கவும். பீன்ஸ் உசிலி தயார்.

0 comments: